தெல்லிப்பழையில் கடந்தவாரம் நடந்த
புற்றுநோய் மருத்துவமனை திறப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்
சீ.வி. விக்னேஸ்வரன், வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட
வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தியிருந்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற நாள் தொடக்கம் அவர், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் படைக்குறைப்பை வலியுறுத்தி வந்திருக்கிறார்.
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைத் திறப்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டதால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு படைக்குறைப்பை மிகவும் பவ்வியமான முறையில் வலியுறுத்தியிருந்தார்.
எதற்காக வடக்கில் இருந்து இராணுவத்தை குறைக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகம் கோணாமலும் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வகையிலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இங்கிருக்கும் மக்கள் தொகைக்கு ஈடான அளவில் இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியது மிகையானதே.
ஏனென்றால், வடக்கின் ஒட்டுமொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேராகும்.
ஆனால், இலங்கை இராணுவத்தின் ஒட்டுமொத்த படைபலமே இதில் நான்கில் ஒரு பங்கு தான்.
அவ்வாறிருக்க, இங்குள்ள மக்கள் தொகைக்கு ஈடாக படையினர் இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டது பெரிதும் மிகையானதே.
ஆனால், வடக்கில் தேவைக்கும் அதிகமானளவு - ஏனைய இடங்களைப் போலன்றி, படையினர் நிலை கொண்டுள்ளனர் என்பது பொய்யான கருத்தல்ல.
வடக்கில் அதிகளவில் நிலைகொண்டுள்ள படையினரால், பல பாதகமான விளைவுகளை வடக்கிலுள்ள மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டிய போதிலும், அதற்கு ஜனாதிபதி கொடுத்திருந்த பதில் வியப்பானது.
நிச்சயம், பாதுகாப்புத்துறை அதிகாரிகளே இந்தப் பதிலைக் கேட்டு வியந்திருப்பார்கள். ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொடுத்த பதில் அவ்வாறானது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முப்படைகளினதும் பிரதம தளபதி. ஆனால், அவரால் வடக்கிலுள்ள படையினர் தொடர்பான புள்ளிவிபரங்களை சரியாக கூறமுடியவில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, போர்க்காலத்தில் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையான படையினர் வடக்கில் நிலை கொண்டிருந்ததாகவும் ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.
தற்போது 12 ஆயிரம் படையினர் தான் வடக்கில் உள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்து இடங்களிலும் அவர்கள் நிலை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இங்கே வடக்கில் என்று முதலமைச்சர் குறிப்பிட்டது யாழ்ப்பாணம், வன்னியை உள்ளிடக்கிய ஒட்டுமொத்த வடமாகாணத்தையும் தான்.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் சரி பாதுகாப்பு அமைச்சும் சரி படை அதிகாரிகளும் சரி படைக்குறைப்பு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது வடக்கு என்றால் அதை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சுட்டிக்காட்டித் தப்பிக் கொள்வதுண்டு.
இம்முறையும் அதே மயக்கமான பதிலைத் தான் கொடுத்திருந்தார் ஜனாதிபதி.
ஆனால், ஒட்டுமொத்த வடக்கில் என்றாலும் சரி யாழ்ப்பாணக் குடாநாட்டில் என்றாலும் சரி 12 ஆயிரம் படையினர் தான் நிலை கொண்டுள்ளனர் என்றால் அதனை எவராலும் நம்பமுடியாது.
போர் நடந்த காலத்தில் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையான படையினர் வடக்கில் நிலை கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி.
போர் நடந்த போது யாழ்.படைத் தலைமையகத்தின் கீழ் 51, 52, 53, 55 என நான்கு டிவிஷன்கள் தான் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்தன.
நான்கு டிவிஷன்களில் 60 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்திருக்க வாய்ப்பே இருக்காது.
2009 டிசம்பரில் தான் யாழ். படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற போது 45 ஆயிரம் படையினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்ததாக முன்னாள் யாழ். கட்டளைத் தளபதி பலமுறை கூறியிருக்கிறார்.
எனவே, போர்க்காலத்தில் 70 ஆயிரம் வரையான படையினர் நிலைகொண்டிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டது யாழ்ப்பாணத்தையா? அல்லது ஒட்டு மொத்த வடக்கு மாகாணத்தையுமா என்ற கேள்வி எழுகிறது.
போரின் உச்சக்கட்டத்தில் ஒட்டுமொத்த வடக்கிலும் 21, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 61, 62, 63, 64, 65, 66, 67, 68 என்று 17 டிவிஷன்கள் நிலை கொண்டிருந்தன.
எனவே, 17 டிவிஷன்களிலும் 70 ஆயிரம் வரையான படையினரையே கொண்டிருக்கும் அளவுக்கு இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்திருக்கவில்லை.
அது போலவே, வடக்கில் தற்போது 12 ஆயிரம் படையினரே உள்ளதாக குறிப்பிட்ட கணக்கும் கேள்விகள் நிறைந்த ஒன்று.
யாழ்ப்பாணத்தில் 12 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளதாக அவர் கூறியிருந்தால் கூட அதற்கும் உண்மைக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியதாகவே இருக்கும்.
ஏனென்றால், யாழ். படைத் தலைமையகத்தின் கீழ் தற்போது 51, 52, 55 என மூன்று டிவிஷன்கள் உள்ளன.
இவற்றில், மொத்தம் 9 பிரிகேட்களும் 39 பற்றாலியன்களும் இருப்பதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த 8ஆம் திகதி மிருசுவில் 52வது டிவிஷன் தலைமையகத் திறப்பு விழாவில் உரையாற்றிய போது கூறியிருந்தார்.
மூன்று டிவிஷன்களில் மொத்தம் 12 ஆயிரம் படையினரே உள்ளனர் என்றால், ஒரு பிரிகேட்டில் 1300 படையினரே உள்ளனர் என்றால் ஒரு பற்றாலியனில் 300 படையினரே உள்ளனர் என்றால் அதை யாராலும் நம்பமுடியாது.
இலங்கை இராணுவத்தின் பற்றாலியன்களில் 600 தொடக்கம் 800 வரையான படையினர் இருப்பதே வழக்கம். அந்த வகையில் பார்த்தால் யாழ். குடாநாட்டிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்ட எண்ணிக்கையை விடவும் இரண்டு மடங்கு படையினர் நிலைகொண்டிருக்க வேண்டும்.
இந்தநிலையில் ஒட்டுமொத்த வடக்கிலும் 12 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர் என்று எந்தவகையிலும் கூறமுடியாது.
ஏனென்றால், வடக்கில் யாழ்ப்பாணம் தவிர வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்று மூன்று படைத் தலைமையகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் 31ற்கும் 39ற்கும் இடைப்பட்ட பற்றாலியன்கள் உள்ளன.
இந்தளவு படைப்பிரிவுகளிலும் 12 ஆயிரம் படையினர் தான் உள்ளனர் என்று கணக்கு காட்டினால் அதை யார் தான் நம்புவார்.
வடக்கில் அதிகளவு படையினரை வைத்திருக்க விரும்பும் அரசாங்கம், தவறான புள்ளிவிபரங்களின் மூலம் அதை நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது என்பதை தெளிவாகவே உணர முடிகிறது.
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்ற பழமொழி அரசாங்கத்துக்கு நினைவில் இல்லை போலும்.
சத்ரியன்
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற நாள் தொடக்கம் அவர், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் படைக்குறைப்பை வலியுறுத்தி வந்திருக்கிறார்.
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைத் திறப்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டதால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு படைக்குறைப்பை மிகவும் பவ்வியமான முறையில் வலியுறுத்தியிருந்தார்.
எதற்காக வடக்கில் இருந்து இராணுவத்தை குறைக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகம் கோணாமலும் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வகையிலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இங்கிருக்கும் மக்கள் தொகைக்கு ஈடான அளவில் இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியது மிகையானதே.
ஏனென்றால், வடக்கின் ஒட்டுமொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேராகும்.
ஆனால், இலங்கை இராணுவத்தின் ஒட்டுமொத்த படைபலமே இதில் நான்கில் ஒரு பங்கு தான்.
அவ்வாறிருக்க, இங்குள்ள மக்கள் தொகைக்கு ஈடாக படையினர் இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டது பெரிதும் மிகையானதே.
ஆனால், வடக்கில் தேவைக்கும் அதிகமானளவு - ஏனைய இடங்களைப் போலன்றி, படையினர் நிலை கொண்டுள்ளனர் என்பது பொய்யான கருத்தல்ல.
வடக்கில் அதிகளவில் நிலைகொண்டுள்ள படையினரால், பல பாதகமான விளைவுகளை வடக்கிலுள்ள மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டிய போதிலும், அதற்கு ஜனாதிபதி கொடுத்திருந்த பதில் வியப்பானது.
நிச்சயம், பாதுகாப்புத்துறை அதிகாரிகளே இந்தப் பதிலைக் கேட்டு வியந்திருப்பார்கள். ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொடுத்த பதில் அவ்வாறானது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முப்படைகளினதும் பிரதம தளபதி. ஆனால், அவரால் வடக்கிலுள்ள படையினர் தொடர்பான புள்ளிவிபரங்களை சரியாக கூறமுடியவில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, போர்க்காலத்தில் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையான படையினர் வடக்கில் நிலை கொண்டிருந்ததாகவும் ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.
தற்போது 12 ஆயிரம் படையினர் தான் வடக்கில் உள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்து இடங்களிலும் அவர்கள் நிலை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இங்கே வடக்கில் என்று முதலமைச்சர் குறிப்பிட்டது யாழ்ப்பாணம், வன்னியை உள்ளிடக்கிய ஒட்டுமொத்த வடமாகாணத்தையும் தான்.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் சரி பாதுகாப்பு அமைச்சும் சரி படை அதிகாரிகளும் சரி படைக்குறைப்பு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது வடக்கு என்றால் அதை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சுட்டிக்காட்டித் தப்பிக் கொள்வதுண்டு.
இம்முறையும் அதே மயக்கமான பதிலைத் தான் கொடுத்திருந்தார் ஜனாதிபதி.
ஆனால், ஒட்டுமொத்த வடக்கில் என்றாலும் சரி யாழ்ப்பாணக் குடாநாட்டில் என்றாலும் சரி 12 ஆயிரம் படையினர் தான் நிலை கொண்டுள்ளனர் என்றால் அதனை எவராலும் நம்பமுடியாது.
போர் நடந்த காலத்தில் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையான படையினர் வடக்கில் நிலை கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி.
போர் நடந்த போது யாழ்.படைத் தலைமையகத்தின் கீழ் 51, 52, 53, 55 என நான்கு டிவிஷன்கள் தான் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்தன.
நான்கு டிவிஷன்களில் 60 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்திருக்க வாய்ப்பே இருக்காது.
2009 டிசம்பரில் தான் யாழ். படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற போது 45 ஆயிரம் படையினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்ததாக முன்னாள் யாழ். கட்டளைத் தளபதி பலமுறை கூறியிருக்கிறார்.
எனவே, போர்க்காலத்தில் 70 ஆயிரம் வரையான படையினர் நிலைகொண்டிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டது யாழ்ப்பாணத்தையா? அல்லது ஒட்டு மொத்த வடக்கு மாகாணத்தையுமா என்ற கேள்வி எழுகிறது.
போரின் உச்சக்கட்டத்தில் ஒட்டுமொத்த வடக்கிலும் 21, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 61, 62, 63, 64, 65, 66, 67, 68 என்று 17 டிவிஷன்கள் நிலை கொண்டிருந்தன.
எனவே, 17 டிவிஷன்களிலும் 70 ஆயிரம் வரையான படையினரையே கொண்டிருக்கும் அளவுக்கு இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்திருக்கவில்லை.
அது போலவே, வடக்கில் தற்போது 12 ஆயிரம் படையினரே உள்ளதாக குறிப்பிட்ட கணக்கும் கேள்விகள் நிறைந்த ஒன்று.
யாழ்ப்பாணத்தில் 12 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளதாக அவர் கூறியிருந்தால் கூட அதற்கும் உண்மைக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியதாகவே இருக்கும்.
ஏனென்றால், யாழ். படைத் தலைமையகத்தின் கீழ் தற்போது 51, 52, 55 என மூன்று டிவிஷன்கள் உள்ளன.
இவற்றில், மொத்தம் 9 பிரிகேட்களும் 39 பற்றாலியன்களும் இருப்பதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த 8ஆம் திகதி மிருசுவில் 52வது டிவிஷன் தலைமையகத் திறப்பு விழாவில் உரையாற்றிய போது கூறியிருந்தார்.
மூன்று டிவிஷன்களில் மொத்தம் 12 ஆயிரம் படையினரே உள்ளனர் என்றால், ஒரு பிரிகேட்டில் 1300 படையினரே உள்ளனர் என்றால் ஒரு பற்றாலியனில் 300 படையினரே உள்ளனர் என்றால் அதை யாராலும் நம்பமுடியாது.
இலங்கை இராணுவத்தின் பற்றாலியன்களில் 600 தொடக்கம் 800 வரையான படையினர் இருப்பதே வழக்கம். அந்த வகையில் பார்த்தால் யாழ். குடாநாட்டிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்ட எண்ணிக்கையை விடவும் இரண்டு மடங்கு படையினர் நிலைகொண்டிருக்க வேண்டும்.
இந்தநிலையில் ஒட்டுமொத்த வடக்கிலும் 12 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர் என்று எந்தவகையிலும் கூறமுடியாது.
ஏனென்றால், வடக்கில் யாழ்ப்பாணம் தவிர வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்று மூன்று படைத் தலைமையகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் 31ற்கும் 39ற்கும் இடைப்பட்ட பற்றாலியன்கள் உள்ளன.
இந்தளவு படைப்பிரிவுகளிலும் 12 ஆயிரம் படையினர் தான் உள்ளனர் என்று கணக்கு காட்டினால் அதை யார் தான் நம்புவார்.
வடக்கில் அதிகளவு படையினரை வைத்திருக்க விரும்பும் அரசாங்கம், தவறான புள்ளிவிபரங்களின் மூலம் அதை நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது என்பதை தெளிவாகவே உணர முடிகிறது.
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்ற பழமொழி அரசாங்கத்துக்கு நினைவில் இல்லை போலும்.
சத்ரியன்
Ingen kommentarer:
Legg inn en kommentar