இந்தியப்
பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதல்வர்
விக்னேஸ்வரனைச் சந்திப்பார், பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்துப்
பேசுவார் என்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 30ம் திகதி
சென்னையில் நடந்த கூட்டமொன்றில் கூறியிருந்தார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ்
கட்சியும் மத்திய அரசும் துரோகம் செய்து விட்டதாக பொதுவாக தமிழக அரசியல்
கட்சிகள் எல்லாமே குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின்
மீதுள்ள பழியைத் துடைக்கும் முயற்சியாக நடத்தப்பட்ட கூட்டத்திலேயே அவர்
இவ்வாறு கூறியிருந்தார். அடுத்த சில மாதங்களிலேயே இந்திய
நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கப் போகிறது.
இந்தியத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சினை எப்போதுமே தாக்கம் செலுத்தியதும் இல்லை. செலுத்தப் போவதுமில்லை என்று காங்கிரஸ் தலைவர்களான ஞானதேசிகன், ஈவிகேஎஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறிக் கொண்டாலும் இந்தத் தேர்தலில் இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கப் போகிறது.
காங்கிரஸ் கட்சி இன்று வரை தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேர முடியாமல் தனித்தே நிற்கிறது.
இதுவே நிரந்தரமானது என்று கூற முடியாவிட்டாலும் ஈழத்தமிழர் பிரச்சினை, காங்கிரஸின் கூட்டணி, தேர்தல் வியூகம், தேர்தல் முடிவுகளிலும்கூட தாக்கம் செலுத்தும் ஒன்றாகவே இருக்குமெனக் கருதப்படுகிறது.
அதனால் தான் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில் தான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் அவர் விரைவில் அங்கு செல்வார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த போது அதைத் தடுத்து நிறுத்தியதில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் முக்கிய பங்கிருந்தது.
எதிர்ப்பை மீறி கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடனும் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க முடியாது போகலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரமும், ஏ.கே. அந்தோனியும் கொடுத்த அழுத்தம்தான் மன்மோகன் சிங்கின் பயணம் ரத்துச் செய்யப்படக் காரணம்.
ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் சரி சிதம்பரம் போன்றவர்களுக்கும் சரி மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணம் செல்ல அனுமதி்திருக்கலாமா என்ற எண்ணம் இப்போது தோன்றியுள்ளது போலுள்ளது.
ஏனென்றால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொமன்வெல்த் மாநாட்டிற்கு வந்து யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்வையிட்டு வெளியிட்ட கருத்துகள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டன.
டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் செலவிட்ட நேரம் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் கூட இல்லாத போதிலும் அவரால் இந்தப் பிரச்சினையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது.
கொமன்வெல்த மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மட்டுமன்றி எந்த நாட்டுத் தலைவருமே பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்கள் எல்லோருமே டேவிட் கமரூனைப் பாராட்டாமல் இருக்கவில்லை.
இந்தநிலையில் தான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தால் என்ன என்ற எண்ணம் ப. சிதம்பரம் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதன்மூலம் வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக வுடன் கூட்டணி அமைப்பதோ அல்லது வாக்குகளைச் சுருட்டுவதிலோ சிக்கல்கள் ஏற்படாதென்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கணக்குப் போடலாம். இந்தநிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரோ என்ற கேள்வி முதன்மை பெறுகிறது.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரேயானால் அது இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய அடியாகவே அமையும்.
ஏனென்றால் 2010ம் ஆண்டு இலங்கைக்கு வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்று அவர் இன்னமும்கூட கொழும்பு வரவில்லை.
அதுமட்டுமன்றி, கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருமாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மூலம் விடுத்த அழைப்பை ஏற்றும் அவர் கொழும்பு வரவில்லை. இந்தநிலையில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று அவர் யாழ்ப்பாணம் வந்தால், இது இலங்கை அரசாங்கத்துக்குப் பேரிடியாக அமையும்.
இராஜதந்திர நெறிமுறைகளின்படி இது இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட ஓர் அவமரியாதை என்று கூடக் கருதப்படலாம். இதனால் தான், ஐ.தே.க.வின் மூத்த தலைவரான ஜோன் அமரதுங்க, இந்தியப் பிரதமரை யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பொங்கியெழுந்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின்றி அவர், யாழ்ப்பாணம் செல்லக் கூடாது என்றும், அது பிரிவினையை ஊக்கப்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
ஆனால், ஒரு நாட்டின் ஜனாதிபதியினது அழைப்பின் பேரில்தான், இன்னொரு நாட்டின் தலைவர் அந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எந்த நியதியும் கிடையாது.
ஒரு நாட்டின் அழைப்பின் பேரில் இன்னொரு நாட்டின் தலைவர் வந்தால், அது அதிகாரபூர்வ பயணமாகவும், இல்லாவிட்டால் அது தனிப்பட்ட பயணமாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.
இதுதான் உலகளாவிய ரீதியாகக் கடைப் பிடிக்கப்படும், இராஜதந்திர வழக்கம்.
எனவே, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் வருவது தவறானது என்றோ, அது பிரிவினையை ஊக்கப்படுத்தும் என்றோ கருதுவதற்கில்லை. ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமரினதோ, ஜனாதிபதியினதோ அழைப்பில்லாமல், பலமுறை இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகானின் அழைப்பை ஏற்று, பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு சாஞ்சிக்கு சென்றிருந்தார். பின்னர், பீகார் முதல்வர் நிதீஸ்குமாரின் அழைப்பின் பேரில், புத்தகயாவுக்கும் சென்றிருந்தார்.
அவையெல்லாம், இந்திய மத்திய அரசுடன் எந்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனால், இந்தியப் பிரதமராக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இருந்து விட்ட மன்மோகன் சிங், இதுவரை இலங்கைக்கு ஒருமுறையேனும், அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. 2008 ல் அவர் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒருமுறை கொழும்பு வந்திருந்தாரே தவிர, அது அரசுமுறைப் பயணம் அல்ல.
அதற்குப் பின்னர், 2010ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை, இன்னமும் ஏற்று கொழும்பு வரவில்லை.
இத்தகைய நிலையில், கொமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை வரும் வாய்ப்பு ஒன்றும் இருந்த போதிலும், அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இந்தநிலையில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று அவர் யாழ்ப்பாணம் வந்தால், அது இலங்கை அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தும். எனவே, மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வார் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், அது நடைமுறைச் சாத்தியமாகுமா என்பது சந்தேகம் தான்.
அதைவிட, டேவிட் கமரூன் போன்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், யாழ்ப்பாணம் சென்றிருந்தால் கருத்து வெளியிட்டிருப்பார் என்று, ப.சிதம்பரம் கூறியிருந்தார். வெளிவிவகார அமைச்சரான சல்மான் குர்ஷித்தினால் அவ்வாறு கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், சிதம்பரம் குறிப்பிட்டது போன்று மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வந்தாலும் கூட, டேவிட் கமரூன் வெளியிட்டது போன்று காட்டமான கருத்தை அவரால் வெளியிட முடியாது. அந்தளவுக்கு கருத்து வெளியிடுவதற்கு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவு இடமளிக்கவும் மாட்டது.
ஹரிகரன்
இந்தியத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சினை எப்போதுமே தாக்கம் செலுத்தியதும் இல்லை. செலுத்தப் போவதுமில்லை என்று காங்கிரஸ் தலைவர்களான ஞானதேசிகன், ஈவிகேஎஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறிக் கொண்டாலும் இந்தத் தேர்தலில் இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கப் போகிறது.
காங்கிரஸ் கட்சி இன்று வரை தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேர முடியாமல் தனித்தே நிற்கிறது.
இதுவே நிரந்தரமானது என்று கூற முடியாவிட்டாலும் ஈழத்தமிழர் பிரச்சினை, காங்கிரஸின் கூட்டணி, தேர்தல் வியூகம், தேர்தல் முடிவுகளிலும்கூட தாக்கம் செலுத்தும் ஒன்றாகவே இருக்குமெனக் கருதப்படுகிறது.
அதனால் தான் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில் தான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் அவர் விரைவில் அங்கு செல்வார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த போது அதைத் தடுத்து நிறுத்தியதில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் முக்கிய பங்கிருந்தது.
எதிர்ப்பை மீறி கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடனும் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க முடியாது போகலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரமும், ஏ.கே. அந்தோனியும் கொடுத்த அழுத்தம்தான் மன்மோகன் சிங்கின் பயணம் ரத்துச் செய்யப்படக் காரணம்.
ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் சரி சிதம்பரம் போன்றவர்களுக்கும் சரி மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணம் செல்ல அனுமதி்திருக்கலாமா என்ற எண்ணம் இப்போது தோன்றியுள்ளது போலுள்ளது.
ஏனென்றால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொமன்வெல்த் மாநாட்டிற்கு வந்து யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்வையிட்டு வெளியிட்ட கருத்துகள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டன.
டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் செலவிட்ட நேரம் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் கூட இல்லாத போதிலும் அவரால் இந்தப் பிரச்சினையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது.
கொமன்வெல்த மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மட்டுமன்றி எந்த நாட்டுத் தலைவருமே பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்கள் எல்லோருமே டேவிட் கமரூனைப் பாராட்டாமல் இருக்கவில்லை.
இந்தநிலையில் தான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தால் என்ன என்ற எண்ணம் ப. சிதம்பரம் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதன்மூலம் வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக வுடன் கூட்டணி அமைப்பதோ அல்லது வாக்குகளைச் சுருட்டுவதிலோ சிக்கல்கள் ஏற்படாதென்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கணக்குப் போடலாம். இந்தநிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரோ என்ற கேள்வி முதன்மை பெறுகிறது.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரேயானால் அது இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய அடியாகவே அமையும்.
ஏனென்றால் 2010ம் ஆண்டு இலங்கைக்கு வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்று அவர் இன்னமும்கூட கொழும்பு வரவில்லை.
அதுமட்டுமன்றி, கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருமாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மூலம் விடுத்த அழைப்பை ஏற்றும் அவர் கொழும்பு வரவில்லை. இந்தநிலையில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று அவர் யாழ்ப்பாணம் வந்தால், இது இலங்கை அரசாங்கத்துக்குப் பேரிடியாக அமையும்.
இராஜதந்திர நெறிமுறைகளின்படி இது இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட ஓர் அவமரியாதை என்று கூடக் கருதப்படலாம். இதனால் தான், ஐ.தே.க.வின் மூத்த தலைவரான ஜோன் அமரதுங்க, இந்தியப் பிரதமரை யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பொங்கியெழுந்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின்றி அவர், யாழ்ப்பாணம் செல்லக் கூடாது என்றும், அது பிரிவினையை ஊக்கப்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
ஆனால், ஒரு நாட்டின் ஜனாதிபதியினது அழைப்பின் பேரில்தான், இன்னொரு நாட்டின் தலைவர் அந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எந்த நியதியும் கிடையாது.
ஒரு நாட்டின் அழைப்பின் பேரில் இன்னொரு நாட்டின் தலைவர் வந்தால், அது அதிகாரபூர்வ பயணமாகவும், இல்லாவிட்டால் அது தனிப்பட்ட பயணமாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.
இதுதான் உலகளாவிய ரீதியாகக் கடைப் பிடிக்கப்படும், இராஜதந்திர வழக்கம்.
எனவே, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் வருவது தவறானது என்றோ, அது பிரிவினையை ஊக்கப்படுத்தும் என்றோ கருதுவதற்கில்லை. ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமரினதோ, ஜனாதிபதியினதோ அழைப்பில்லாமல், பலமுறை இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகானின் அழைப்பை ஏற்று, பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு சாஞ்சிக்கு சென்றிருந்தார். பின்னர், பீகார் முதல்வர் நிதீஸ்குமாரின் அழைப்பின் பேரில், புத்தகயாவுக்கும் சென்றிருந்தார்.
அவையெல்லாம், இந்திய மத்திய அரசுடன் எந்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனால், இந்தியப் பிரதமராக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இருந்து விட்ட மன்மோகன் சிங், இதுவரை இலங்கைக்கு ஒருமுறையேனும், அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. 2008 ல் அவர் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒருமுறை கொழும்பு வந்திருந்தாரே தவிர, அது அரசுமுறைப் பயணம் அல்ல.
அதற்குப் பின்னர், 2010ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை, இன்னமும் ஏற்று கொழும்பு வரவில்லை.
இத்தகைய நிலையில், கொமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை வரும் வாய்ப்பு ஒன்றும் இருந்த போதிலும், அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இந்தநிலையில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று அவர் யாழ்ப்பாணம் வந்தால், அது இலங்கை அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தும். எனவே, மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வார் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், அது நடைமுறைச் சாத்தியமாகுமா என்பது சந்தேகம் தான்.
அதைவிட, டேவிட் கமரூன் போன்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், யாழ்ப்பாணம் சென்றிருந்தால் கருத்து வெளியிட்டிருப்பார் என்று, ப.சிதம்பரம் கூறியிருந்தார். வெளிவிவகார அமைச்சரான சல்மான் குர்ஷித்தினால் அவ்வாறு கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், சிதம்பரம் குறிப்பிட்டது போன்று மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வந்தாலும் கூட, டேவிட் கமரூன் வெளியிட்டது போன்று காட்டமான கருத்தை அவரால் வெளியிட முடியாது. அந்தளவுக்கு கருத்து வெளியிடுவதற்கு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவு இடமளிக்கவும் மாட்டது.
ஹரிகரன்
Ingen kommentarer:
Legg inn en kommentar